பொருளாதாரக் கொள்கை சரியில்லை
மும்பை:
மேக் இன் இந்தியா,உஜ்வாலா யோஜனாமற்றும் திறந்தவெளி மலம் கழித்தலை முற்றிலும் ஒழிப்பது போன்ற திட்டங்களுக்காக பிரதமர் மோடி கடுமையாகஉழைக்கிறார்; ஆனால், நாம் நாட்டுக்குத் தேவையாக இருப்பது நுண்பொருளாதாரக் கொள் கைகள்தான். அந்த கொள்கை முடிவுகளை நாம் இன் னும் எடுக்கவில்லை. அதனால், இப்போது சிலபிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். மேலும், முதல் பிரதமர் நேரு, சோவியத் நாட்டின்பொருளாதாரக் கொள் கைகளை இந்தியாவில் சுமத்தியதுதான் பொருளாதாரப் பின்னடைவுகளுக்குக் காரணம் என்றும் சிரிப்பு காட்டியுள்ளார்.
முடிவுக்கு வந்த இழுபறி
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள பாஜக - சிவசேனா கூட்டணியில், தொகுதிப் பங்கீடு நீண்ட இழுபறியாக போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில், திங்கட்கிழமையன்று அது முடிவுக்கு வந்து, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 164 தொகுதிகளிலும், சிவசேனா 124 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே, 125 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் பாஜக வெளியிட்டுள்ளது.
சின்மயானந்த் சிறையில் அடைப்பு
லக்னோ:
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் வல்லுறவு வழக்கில் கைதுசெய்யப்பட்டு, பின்னர்உடல்நலம் சரியில்லை என்று லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 73 வயதான சின்மயானந்த் அங்கிருந்தபடியே ஜாமீன்கேட்டு நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால்,அவருக்கு ஜாமீன் மறுக் கப்பட்ட நிலையில் திங்களன்று மாலை மருத்துவமனை யிலிருந்து டிஸ் சார்ஜ் செய்யப்பட்டு, ஷாஜகான்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
15 பேருக்கு மீண்டும் வாய்ப்பு
பெங்களூரு:
கர்நாடக மாநிலத் தில், தகுதி நீக்கம் செய் யப்பட்ட 15 எம்எல்ஏ-க்கள், மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று பாஜக தலைவரும், கர் நாடக முதல்வருமான எடியூரப்பா தெரிவித்துள் ளார். காங்கிரஸ், மதச்சார் பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-க்கள்பதவியை இழந்ததால் தான் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தது என்பதால், அவர்கள் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புஅளிக்கப்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.